ADDED : மே 26, 2025 12:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பல்லுயிர் தினத்தையொட்டி பிள்ளையார்குப்பத்தில் வெட்டி வேர் செடி நடும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி மையம் பவுன்டேஷன் சார்பில், பத்துக்கண்ணு அருகே உள்ள பிள்ளையார்குப்பம் ஐயனார் கோவில் பகுதியில், வெட்டி வேர் செடி நடும் நிகழ்ச்சி நடந்தது. பவுன்டேஷன் நிறுவனர் பாலகங்காதரன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
தாகூர் கலைக் கல்லுாரி பேராசிரியர் ஜென்னி பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மணக்குள விநாயகர் கல்லுாரி மாணவர்கள், நுாற்றுக்கு மேற்பட்ட வெட்டி வேர் செடிகளை நட்டனர். பின்னர், பொதுமக்களுக்கு செடிகளை வழங்கினர். இந்த செடிகள் குடலுக்கு குளிர்ச்சி தருவது மட்டும் இல்லாமல், மண் அரிப்பு மற்றும் மண் பாதுகாப்பை ஏற்படுத்துகிறது.