தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டிரைவர் மீது தாக்குதல்; லாரி உரிமையாளருக்கு வலை

டிரைவர் மீது தாக்குதல்; லாரி உரிமையாளருக்கு வலை

டிரைவர் மீது தாக்குதல்; லாரி உரிமையாளருக்கு வலை


ADDED : ஏப் 19, 2025 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2025 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்; கூனிச்சம்பட்டு, அய்த்தலாம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ், 36; லாரி டிரைவர். மடுகரையை சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு லாரி ஓட்டி வருகிறார். இவர் கடந்த 15ம் தேதி லாரியில் லோடு ஏற்றிக் கொண்டு கோயம்புத்துார் சென்றார். அங்கு லோடு இறக்கியதற்கான பணத்தினை பெற்று வந்து குணசேகரனிடம் கொடுக்கவில்லை.

இது குறித்து குணசேகரன் கூனிச்சம்பட்டில் உள்ள ராஜேஷ் வீட்டிற்கு சென்று கேட்டார். பின், அவரை மடுகரை சடகோபால் சாலை அழைத்து வந்து, குணசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ராஜேைஷ தாக்கினர். இது தொடர்பாக வெளியில் கூறினால் பண மோசடி வழக்கு தொடர்வதாக குணசேகரன், ராஜேஷிடம் தெரிவித்துவிட்டு சென்றார். இதனால் மனமுடைந்த ராஜேஷ் வீட்டிற்கு சென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை, உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது தாய் பத்மா புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து குணசேகரனை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us