ADDED : ஜூன் 20, 2025 02:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கடன் பிரச்னையால் காணாமல் போன பஸ் டிரைவரை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்வியனுார் அடுத்த கணுவாபேட், புதுநகரை சேர்ந்தவர் பச்சையப்பன், 37, இவர் பஸ் டிரைவராக பணி செய்து வருகிறார். கடன் பிரச்னையால் மனஉளச்சலில் இருந்தஇவர், கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.