தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : ஆக 04, 2025 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2025 11:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நடை பயிற்சிக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

மூலக்குளம், முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்,43; சுமை துாக்கும் தொழிலாளி. இவரது மனைவி பென்னரசி,37; இவர்களுக்கு சுஜித்திரா,18; என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

பென்னரசி, கணவர் மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியாக வேலூரில் வசிக்கிறார். சுரேஷ் தனது பிள்ளைகளுடன், இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.

கடந்த 24ம் தேதி இரவு 9 மணிக்கு சுஜித்திரா சாப்பிட்டு விட்டு வீட்டின் வெளியே நடைபயிற்சிக்கு சென்றவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து சுஜித்திராவை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us