தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு ஊழியர் தற்கொலை

அரசு ஊழியர் தற்கொலை

அரசு ஊழியர் தற்கொலை


ADDED : டிச 07, 2024 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 07, 2024 07:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மனைவி பிரிந்து சென்றதால் பொதுப்பணித்துறை ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனுார் உத்திரவாகினிப்பேட் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கலைமாறன், 34; பொதுப்பணித்துறை டேங்க் ஆப்ரேட்டர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார்.

இதனை மனைவி மகாலட்சுமி கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மகாலட்சுமி திருபுவனையில் உள்ள தாய் வீட்டிற்கு பிள்ளைகளுடன் சென்று, 8 மாதங்களாக தங்கியுள்ளார்.

மனைவி பிரிந்து சென்றதில் இருந்து மன வேதனையில் இருந்த கலைமாறன் நேற்று வி.தட்டாஞ்சாவடியில் உள்ள வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us