sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கவர்னர் தமிழிசையின் 'எக்ஸ்' பக்கம் முடக்கம்

/

கவர்னர் தமிழிசையின் 'எக்ஸ்' பக்கம் முடக்கம்

கவர்னர் தமிழிசையின் 'எக்ஸ்' பக்கம் முடக்கம்

கவர்னர் தமிழிசையின் 'எக்ஸ்' பக்கம் முடக்கம்


ADDED : ஜன 17, 2024 08:42 AM

Google News

ADDED : ஜன 17, 2024 08:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி கவர்னர் தமிழிசையின் 'எக்ஸ்'பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் 'ஹேக்' செய்து ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

இதனை தடுக்கக் கோரி கவர்னர் தமிழிசை மத்திய அரசை வலியுறுத்தி வந்தார். ஆனால் மீண்டும் ஆபாசப்படங்கள் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பேஸ்புக் பக்கத்தில் வந்தன. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி கவர்னர் தமிழிசையின் 'எக்ஸ்' வலைதள பக்கத்தை மர்ம நபர்கள் நேற்று 'ஹேக்' செய்தனர். 'ஹேக்' செய்யப்பட்ட 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தை மீட்கும் முயற்சியில் கவர்னர் மாளிகை தொழில்நுட்ப பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கவர்னரின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தை முடக்கிய மர்ம நபர்கள் யார், எதற்காக முடக்கினர் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.






      Dinamalar
      Follow us