ADDED : மே 31, 2025 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி :மனைவியிடம் கோபித்து கொண்டு சென்ற கணவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதலியார்பேட்டை, காந்தி வீதியை சேர்ந்தவர் குப்பன், 74. இவர் குடும்ப பிரச்னையில், தனது மனைவியிடம் கோபித்து கொண்டு, கடந்த 12ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். வெகு நேரமாகியும் அவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.