/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குளத்தில் மூழ்கி இறந்தவர் குறித்து விசாரணை
/
குளத்தில் மூழ்கி இறந்தவர் குறித்து விசாரணை
ADDED : ஜூன் 09, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்கால் அம்பகரத்துார் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த திரு மூர்த்தி மகன் சுந்தரபாண்டியன், 48; பெட்டிக்கடை நடத்தி வந்தார்.
குடிபழக்கம் உள்ள தால், இவரது மனைவி ரத்தினகுமாரி கணவரிடம் கோபித்துக் கொண்டு பிரிந்து வாழ்ந்து வரு கிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதி யில் உள்ள ஒட்டக் கரை பிள்ளையார் கோவில் குளத்தில் சுந்தரபாண்டியன் மூழ்கி இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த அம்பகரத்துார் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.