தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாராயம் விற்றவர் கைது

 சாராயம் விற்றவர் கைது

 சாராயம் விற்றவர் கைது


ADDED : மார் 05, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 04:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் அருகே சட்ட விரோதமாக சாராயம் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர் அடுத்த பரிக்கல்பட்டு பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக பாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் பரிக்கல்பட்டு பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்தின் பேரில், அப்பகுதியை சேர்ந்த சேகர், 57, என்பவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அவர் வீட்டில் பதுக்கி வைத்து சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 180 எம்.எல்., கொண்ட 39 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us