ADDED : மார் 23, 2026 10:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாமாக பேசியவரை போலீசார் கைது செய்தனர்.
காலப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கழுபெரும்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோபால் 47, என்பவர் மதுபோதையில் பிம்ஸ் மருத்துவமனை சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
