sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆதரவற்ற பெண்களுக்கு உதவி தொகையை உயர்த்த பரிசீலனை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்

/

ஆதரவற்ற பெண்களுக்கு உதவி தொகையை உயர்த்த பரிசீலனை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்

ஆதரவற்ற பெண்களுக்கு உதவி தொகையை உயர்த்த பரிசீலனை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்

ஆதரவற்ற பெண்களுக்கு உதவி தொகையை உயர்த்த பரிசீலனை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்


ADDED : மார் 19, 2025 04:21 AM

Google News

ADDED : மார் 19, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சட்டசபை கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்;

நேரு எம்.எல்.ஏ.,: புதுச்சேரியில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர், முதிர்கன்னி உள்ளிட்ட ஆதரவற்ற பெண்கள் எதிர்காலம் இல்லாமல் உள்ளனர். குறைந்த சம்பளத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.

அவர்களுக்கு உதவித் தொகையை உயர்த்த வேண்டும். அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். குறிப்பாக அங்கன்வாடி, சத்துணவு பணிகளில் அவர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுக்கலாம். அவர்களது வேலைக்கான வயது வரம்பை 45 வயது வரை உயர்த்த வேண்டும்.

அமைச்சர் தேனீ ஜெயக்குமார்: இதில் அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமியிடம் கலந்து ஆலோசித்து அவர்களுக்கு உதவி செய்யப்படும். அவர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதை அரசு பரிசீலிக்கும். ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தியுள்ளோம். எனவே நிதி நிலைமைக்கு ஏற்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.






      Dinamalar
      Follow us