தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறை கைதியிடம் போன் பறிமுதல்

 சிறை கைதியிடம் போன் பறிமுதல்

 சிறை கைதியிடம் போன் பறிமுதல்


ADDED : ஜன 01, 2026 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2026 04:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மத்திய சிறை கைதியிடம் மொபைல் போனை பறிமுதல் செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காலாப்பட்டு, மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 250 பேர் உள்ளனர். கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் சிறை காவலர்கள் நேற்று முன்தினம், தண்டனை கைதிகள் அறையில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, போக்சோ வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் உதயன் அறையில், பதுக்கி வைத்திருந்த மொபைல் போனை சிறைக்காவலர்கள் கண்டெடுத்து பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us