ADDED : பிப் 27, 2024 06:50 AM

புதுச்சேரி: முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
புதுச்சேரி தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டு, பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி தேசிய புள்ளியியல் துணை மண்டல அலுவலக செயல்பாட்டு பிரிவு சார்பில், முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
உதவி இயக்குனர் பாலாஜி தலைமை தாங்கி, மரக்கன்றுகள் நடும் விழாவினை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. மரங்களை நடுவதால், இயற்கை வளங்களை மேம்படுத்த முடியும் என மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


