/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆலங்குப்பத்தில் நாளை வரி வசூல் முகாம்
/
ஆலங்குப்பத்தில் நாளை வரி வசூல் முகாம்
ADDED : ஜன 27, 2024 06:26 AM
புதுச்சேரி : உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு:
உழவர்கரை நகராட்சியில் வீட்டுவரி, சொத்துவரி, சேவை வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்துவோர் நலன் கருதி ஆலங்குப்பம், அரசு ஆரம்ப பள்ளியில் வரி வசூல் சிறப்பு முகாம் நாளை 28ம் தேதி காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆலங்குப்பம் மற்றும் இதர வார்டுகளில் உள்ள சொத்து வரி, சேவை வரி, குடிநீர் கட்டணம் நிலுவைதாரர்கள் 2023-24ம் ஆண்டிற்கான வரியை செலுத்தலாம்.
இன்றும் நாளையும் வி.வி.பி., நகர் வீட்டு வரி வசூல் மையம் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை தொடர்ந்து நடக்கும். உழவர்கரை நகராட்சியில், அனைத்து வார்டுகளில் வீட்டுவரி, சொத்துவரி மற்றும் சேவை வரி நிலுவைதாரர்கள் 2023-24ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு செலுத்தி வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிர்க்கவும். வீட்டுவரி, சொத்துவரி, சேவை வரி செலுத்துவோர் ஆன்லைன் மூலம் lgrams.py.gov.in என்ற முகவரியில் டெபிட், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம்.

