/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தந்தை, மகனை கத்தியால் குத்திய வாலிபர் கைது
/
தந்தை, மகனை கத்தியால் குத்திய வாலிபர் கைது
ADDED : பிப் 01, 2024 11:32 PM
திருக்கனுார்: நிலத் தகராறில் தந்தை, மகனை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு, பிள்ளையார் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் விஜயன், 50; விவசாயி. இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த கோபி என்பவருக்கும் இடையே நிலத் தகராறு தொடர்பாக முன்விரோதம் உள்ளது
நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோபி, கத்தியால் விஜயன், அவரது தந்தை பரசுராமன் ஆகியோரை குத்திவிட்டு, தப்பிச் சென்றார்.
படுகாயமடைந்த விஜயன், பரசுராமன் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பரசுராமன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பரசுராமனின் மனைவி செந்தாமரை அளித்த புகாரின் பேரில்,கோபி மீது திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் புனிதராஜா மற்றும் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, தேடி வந்தனர்.
தலைமறைவாக இருந்த கோபியை நேற்று போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

