sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடலில் மாயமான மாணவர் உடல் கரை ஒதுங்கியது

/

கடலில் மாயமான மாணவர் உடல் கரை ஒதுங்கியது

கடலில் மாயமான மாணவர் உடல் கரை ஒதுங்கியது

கடலில் மாயமான மாணவர் உடல் கரை ஒதுங்கியது


ADDED : ஜன 03, 2024 12:16 AM

Google News

ADDED : ஜன 03, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி கடலில் குளித்தபோது மயமான மாணவர் உடல் நேற்று சின்னவீராம்பட்டினத்தில் கரை ஒதுங்கியது.

புதுச்சேரி, நெல்லித்தோப்பு, டி.ஆர். நகர், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள்கள் மோகனா, 17; லேகா, 14; சுப்ரமணிய பாரதி அரசு பள்ளியில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்தனர். இருவரும் தனது தாய் மீனாட்சியுடன் கடந்த 31ம் தேதி புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்றனர். இவர்களுடன் எல்லப்பிள்ளைச்சாவடி, சாராதாம்பாள் கோவில் அருகில் வசிக்கும் நவீன், 17; சாரம், பாலாஜி நகர் கிஷோர், 17; ஆகியோரும் சென்றனர்.

நால்வரும் சீகல்ஸ் ஓட்டல் பின்புறம் கடலில் குளித்து விளையாடினர். அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கி நால்வரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.

இதில், மோகனா, லேகா, கிஷோர் உடல் நேற்று முன்தினம் கரை ஒதுங்கியது. நவீன் உடலை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சின்னவீராம்பட்டினம் கடற்கரையில் நவீன் உடல் நேற்று கரை ஒதுங்கியது. அரியாங்குப்பம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us