/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழகம், புதுச்சேரியில் வி.சி., கட்சி மறு சீரமைப்பு திருமாவளவன் தகவல்
/
தமிழகம், புதுச்சேரியில் வி.சி., கட்சி மறு சீரமைப்பு திருமாவளவன் தகவல்
தமிழகம், புதுச்சேரியில் வி.சி., கட்சி மறு சீரமைப்பு திருமாவளவன் தகவல்
தமிழகம், புதுச்சேரியில் வி.சி., கட்சி மறு சீரமைப்பு திருமாவளவன் தகவல்
ADDED : ஜூன் 02, 2025 06:12 AM
புதுச்சேரி: தமிழக, புதுச்சேரி இரு மாநிலங்களில், கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கை விரைவுப்படுத்தப்படும் என, வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
புதுச்சேரி வந்த அவர் அளித்த பேட்டி:
தி.மு.க., வில், துணை நிலை அமைப்புகளில் கூடுதலாக இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது. மாற்றுத் திறனாளிகளுக்கென தனி கவனம் செலுத்துவதற்காக இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. கல்வியாளர் அணி என்பது ஒரு புதிய முயற்சி வேறு எந்த அரசியில் கட்சி யிலும் இல்லை.
தமிழக அரசு கல்வி தரத்தை மேம்படுத்தவும், கல்வி தொடர்பாக கொள்கைகளை வரையறை செய்யவும், கல்வியை இந்திய அளவில் உயர்ந்த இடத்தில் தமிழகத்தை சேர்ப்பதற்கு தி.மு.க., சிறப்பு கவனம் செலுத்துவதே இதன் நோக்கம் என்றார்.
மேலும், புதுச்சேரி, தமிழகத்தில் வி.சி., கட்சி மாநில தலைமை நிர்வாகிகள் மாற்றம் குறித்து அவர் கூறுகையில், திருச்சி பேரணி முடிந்த பிறகு, ஜூன் 14ம் தேதி மதசார்பின்மை காப்போம் பேரணி நடத்த உள்ளோம் அதன் பின்னர், தமிழகம், புதுச்சேரியில் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்படும் என, தெரிவித்தார்.