ADDED : ஜன 26, 2024 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளியின் துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் வாணி முன்னிலை வகித்தார். நல்லாசிரியர் வெற்றிவேல் நோக்கவுரையாற்றினார்.
பாகூர் துணை தாசில்தார் விமலன் கலந்து கொண்டு நேர்மையான மற்றும் முழுமையான ஓட்டுப்பதிவு குறித்து கருத்துரை வழங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் மற்றும் புதிய வாக்காளர்கள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ஏற்பாடுகளைத் தேர்தல் அலுவலர்கள் செய்திருந்தனர்.

