ADDED : ஜன 25, 2024 04:47 AM
அ நிறம் | அளவு
பாகூர் : கிருமாம்பாக்கம் அடுத்த வம்பாபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம், 52; கூலி தொழிலாளி. இவரது மனைவி வீரம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
குடிப்பழக்கம் உடைய தர்மலிங்கம் குடும்ப செலவுக்கு தேவையான பணம் இல்லாததால் மன வருத்தத்தில் இருந்து வந்தவர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
