ADDED : மார் 21, 2026 04:20 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காலாப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது பிள்ளைச்சாவடி சேர்ந்த பிரகாஷ், 46, என்பவர், மது போதையில் கனகசெட்டிக்குளம் - சின்ன கொழுவரி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும், பொது மக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார்.
அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.





