sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

இந்திய ஜோடிக்கு வெண்கலம்: சீன பாரா பாட்மின்டனில்

/

இந்திய ஜோடிக்கு வெண்கலம்: சீன பாரா பாட்மின்டனில்

இந்திய ஜோடிக்கு வெண்கலம்: சீன பாரா பாட்மின்டனில்

இந்திய ஜோடிக்கு வெண்கலம்: சீன பாரா பாட்மின்டனில்


ADDED : செப் 20, 2025 11:09 PM

Google News

ADDED : செப் 20, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஜிங்: சீன பாரா பாட்மின்டனில் இந்தியாவின் பிரேம் குமார் ஆலே, அபு ஹுபைதா ஜோடி வெண்கலம் வென்றது.

சீனாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு (டபிள்யு.எச். 1-2) அரையிறுதியில் இந்தியாவின் பிரேம் குமார் ஆலே, அபு ஹுபைதா ஜோடி 4-21, 10-21 என்ற செட் கணக்கில் சீனாவின் மை ஜியான்பெங், ஜிமோ ஜோடியிடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது.

மற்றொரு அரையிறுதியில் (எஸ்.எல். 3-4) இந்தியாவின் பிரமோத் பகத், சுகந்த் கடம் ஜோடி 21-16, 21-17 என சீனாவின் யுயாங் காவோ, ஜியாங் லிசுவான் ஜோடியை வீழ்த்தியது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு (எஸ்.எல். 3) அரையிறுதியில் இந்தியாவின் பிரமோத் பகத் 21-16, 21-19 என, ஜப்பானின் புஜிஹராவை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் (எஸ்.எல். 4) இந்தியாவின் சுகந்த் கடம் 21-16, 21-12 என தென் கொரியாவின் சோ நடானை தோற்கடித்தார். எஸ்.எச். 4 பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் நாகர் கிருஷ்ணா 21-16, 21-16 என சீனாவின் கிங்டாவோ ஜெங்கை வென்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு (எஸ்.எச். 4) பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நித்யா ஸ்ரீ சுமதி 21-12, 15-21, 21-13 என சீனாவின் பெங்மெய் லீயை வீழ்த்தினார்.






      Dinamalar
      Follow us