sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய அச்சிறுபாக்கம் புறவழிச்சாலை

/

'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய அச்சிறுபாக்கம் புறவழிச்சாலை

'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய அச்சிறுபாக்கம் புறவழிச்சாலை

'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய அச்சிறுபாக்கம் புறவழிச்சாலை


ADDED : ஜூலை 14, 2024 01:13 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 01:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில் புறவழிச்சாலையில் உள்ள தனியார் வங்கி எதிரே போதிய இடவசதி இல்லாததால், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அச்சிறுபாக்கம் பகுதியில் உள்ள சாலையின் இரு மார்க்கத்திலும் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில், எலப்பாக்கம், திம்மாபுரம் பகுதியிலிருந்து, சென்னை மார்க்கத்தில் தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் புறவழிச்சாலை பகுதியில், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் வங்கிகள், மளிகை கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை உள்ளன.

இவற்றில், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதி இல்லை. இதனால், இருசக்கர வாகனங்களில் வரும் தனியார் வங்கி வாடிக்கையாளர்கள், இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

இதனால், அச்சிறுபாக்கம், எலப்பாக்கம் பகுதியில் இருந்து வரும் அரசு பேருந்து மற்றும் புறவழி சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே, புறவழிச்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை முறைப்படுத்த, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us