sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நெல்வாய்பாளையம் சாலையை விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு

/

நெல்வாய்பாளையம் சாலையை விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு

நெல்வாய்பாளையம் சாலையை விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு

நெல்வாய்பாளையம் சாலையை விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு


ADDED : ஜூலை 28, 2024 11:45 PM

Google News

ADDED : ஜூலை 28, 2024 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர் : செய்யூர் அருகே வடக்கு செய்யூர் சாலை சந்திப்பில் இருந்து, நெல்வாய்பாளையம் செல்லும் 10 கி.மீ., அளவிலான தார் சாலை உள்ளது. இந்த சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இது, பெரும்பாக்கம், மடையம்பாக்கம், வீரபோகம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான சாலை. தினசரி பள்ளி, கல்லுாரி மற்றும் விவசாய வேலைக்கு செல்லும் நுாற்றுக்கணக்கானோர், இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

இப்பகுதியில், ஏராளமான கல் குவாரிகள் செயல்படுகின்றன. கல் குவாரிகளுக்கு அதிகப்படியான லாரிகள் வந்து செல்கின்றன.

தற்போது அமைக்கப்பட்டு உள்ள தார்சாலை, குறுகலாக, 8 மீட்டர் அகலம் மட்டுமே உள்ளதால், எதிர் எதிரே வரும் வாகனங்கள் செல்ல வழியின்றி, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

வளைவுப்பகுதிகளில் வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகின்றன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us