sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாதவரத்தில் ரூ.40 லட்சம் மதிப்பு வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்

/

மாதவரத்தில் ரூ.40 லட்சம் மதிப்பு வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்

மாதவரத்தில் ரூ.40 லட்சம் மதிப்பு வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்

மாதவரத்தில் ரூ.40 லட்சம் மதிப்பு வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்


ADDED : ஜூலை 28, 2024 11:35 PM

Google News

ADDED : ஜூலை 28, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாதவரம் : மாதவரத்தில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில், வெளிநாட்டு சிகரெட் பதுக்கியிருப்பதாக, ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சோதனையிட்டனர்.

அதன் கிடங்கை சோதனையிட்டதில், 470 சிகரெட் பண்டல்கள் இருந்தன. 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், மும்பையில் இருந்து வெளிநாட்டு சிகரெட்களை லாரியில் எடுத்து வந்து, கிடங்கி பதுக்கியது தெரிந்தது.

இது தொடர்பாக, மும்பையைச் சேர்ந்த நியாஸ், பார்சல் சர்வீஸ் அலுவலகத்தை நிர்வகித்து வரும் கிஷன்குமார், ராதிகா ஆகிய மூன்று பேரையும், ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து, மாதவரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பார்சல் சர்வீஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் என கூறப்படும் பிஜயந்த் தோபன் பத்ரா, ஜெயபிரகாஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us