sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வார்டு அலுவலகத்திற்கு புது கட்டடம்; ஒப்பந்த சிக்கலால் பாதியில் நிறுத்தம்

/

வார்டு அலுவலகத்திற்கு புது கட்டடம்; ஒப்பந்த சிக்கலால் பாதியில் நிறுத்தம்

வார்டு அலுவலகத்திற்கு புது கட்டடம்; ஒப்பந்த சிக்கலால் பாதியில் நிறுத்தம்

வார்டு அலுவலகத்திற்கு புது கட்டடம்; ஒப்பந்த சிக்கலால் பாதியில் நிறுத்தம்


ADDED : ஜூலை 28, 2024 11:34 PM

Google News

ADDED : ஜூலை 28, 2024 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரப்பாக்கம் : சோழிங்கநல்லுார் மண்டலம், 198வது வார்டு, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில் வார்டு அலுவலகம் உள்ளது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த அலுவலகம், சாலை மட்டத்தைவிட 5 அடி பள்ளத்தில் உள்ளது.

ஒவ்வொரு பருவமழைக்கும், வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்படுகிறது. பல ஆவணங்கள் நனைந்து சேதமடைந்துள்ளன.

புதிய அலுவலகம் கட்ட, 1.35 கோடி ரூபாயை, மாநகராட்சி ஒதுக்கியது. பொறியியல், வரி வசூல், சுகாதாரம், கவுன்சிலர் அலுவலகம் உள்ளிட்ட வசதியுடன், 5,600 சதுர அடி பரப்பில், கட்டுமான பணி மார்ச் மாதம் துவங்கியது.

பருவமழைக்கு முன், பணியை முடிக்க வேண்டும் என, ஆதித்யா கட்டுமான நிறுவனத்திடம், மாநகராட்சி வலியுறுத்தியது. தரை பலப்படுத்திய நிலையுடன், பணி கிடப்பில் போடப்பட்டது.

இதனால், இந்த ஆண்டு பருவமழைக்கும், அலுவலகங்களில் வெள்ளம் புகுந்து ஆவணங்கள் சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மழை பாதிப்பை கருத்தில் கொண்டு, பணியை வேகமாக முடிக்க வேண்டும் என, கட்டுமான நிறுவனத்திடம் வலியுறுத்தினோம். அவர்கள், அவ்வாறு செய்யாததால் பணி நிறுத்தப்பட்டது. இது குறித்து உயர் அதிகாரிகளிடம் அறிக்கை அனுப்பி உள்ளோம். இதே நிறுவனத்தை தொடர்வதா அல்லது வேறு நிறுவனத்திற்கு மாற்றுவதா என, அதிகாரிகள் முடிவு செய்வர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us