sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுகோள்

/

கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுகோள்

கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுகோள்

கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுகோள்


ADDED : ஜூலை 18, 2024 12:11 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் பஜார் பகுதியில், மூன்று அரசு பள்ளிகள் மற்றும் எட்டு தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு, புத்துார், அம்மனுார், செங்காட்டூர், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, நுாற்றுக்கணக்கான மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் சைக்கிள், வேன், பேருந்துகள் வாயிலாக, பள்ளிக்கு வந்து செல்கின்றனர். செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளில், ஏராளமான கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்படுகின்றன.

கல் குவாரிகள் மற்றும் கிரஷர்களில் இருந்து, லாரிகள் வாயிலாக ஜல்லிக்கற்கள் மற்றும் எம் - சாண்ட் ஆகியவை, கட்டுமானப் பணிகளுக்காக, சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

தினசரி அதிகப்படியான லாரிகள் செய்யூர் பஜார் பகுதியில் செல்வதால், காலை மற்றும் மாலை வேளைகளில், பள்ளி மாணவர்கள் சாலையில் நடந்து செல்ல கடுமையாக அவதிப்படுகின்றனர்.

ஆகையால், காலை, மாலை வேளைகளில், செய்யூர் பஜார் பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us