sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புதிதாக கட்டிய பயணியர் நிழற்கூரை; திறக்கும் முன் ஆக்கிரமித்து அடாவடி

/

புதிதாக கட்டிய பயணியர் நிழற்கூரை; திறக்கும் முன் ஆக்கிரமித்து அடாவடி

புதிதாக கட்டிய பயணியர் நிழற்கூரை; திறக்கும் முன் ஆக்கிரமித்து அடாவடி

புதிதாக கட்டிய பயணியர் நிழற்கூரை; திறக்கும் முன் ஆக்கிரமித்து அடாவடி


ADDED : ஜூலை 28, 2024 11:36 PM

Google News

ADDED : ஜூலை 28, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர் : உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் இருந்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு, அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையத்தில், பயணியர் நலனுக்காக எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 60 லட்சம் ரூபாய் செலவில், 2015- - 16ல் கூரை அமைக்கப்பட்டது.

எனினும், உத்திரமேரூரில் இருந்து வந்தவாசி, போளூர், தாம்பரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், பேருந்து நிலையம் எதிரே உள்ள மெயின் சாலை வழியாகவே செல்கின்றன.

இதனால், பிரதான சாலை பேருந்து நிறுத்தத்திலும் நிழற்கூரை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இக்கோரிக்கையை ஏற்று, பேருந்து நிலையம் எதிரில் பயணியர் நிழற்கூரை அமைக்க, உத்திரமேரூர் தி.முக., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 49 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கான பணி, கடந்த மார்ச் மாதம் துவங்கி, தற்போது நிறைவு பெற்றுள்ளது.

பயன்பாட்டுக்கு வரும் முன்பே இந்த பயணியர் நிழற்கூரை பகுதியில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தியும், பூ மாலை போன்ற கடைகள் அமைத்தும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி வருகிறது.

இங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றுவதோடு, பயணியர் மட்டுமே நிழற்கூரையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us