/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
95 சதவீத பேருந்துகள் இயக்கம் செங்கையில் இயல்பான போக்குவரத்து
/
95 சதவீத பேருந்துகள் இயக்கம் செங்கையில் இயல்பான போக்குவரத்து
95 சதவீத பேருந்துகள் இயக்கம் செங்கையில் இயல்பான போக்குவரத்து
95 சதவீத பேருந்துகள் இயக்கம் செங்கையில் இயல்பான போக்குவரத்து
ADDED : ஜன 10, 2024 12:26 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு பணிமனையில் இருந்து, 73 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று, ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால், கிராமப்புறங்களுக்கு சென்ற 24 பேருந்துகள் உட்பட, 46 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த பணிமனையில், அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., - பா.ம.க., - பி.எம்.எஸ்., - ஏ.பி.எல்.ஏப்., ஆகிய சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றன.
தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மட்டும், போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்வோர், ரயில்களில் பயணித்தனர்.
மதுராந்தகம்
காஞ்சிபுரம், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, அரசு பேருந்துகள் குறைவாக சென்றன.
செங்கல்பட்டு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில், 25 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மதுராந்தகம் பணிமனையில், தி.மு.க.,வின் தொழிற்சங்கம், எச்.எம்.எஸ்., - வி.சி., - ஐ.என்.டி.யு.சி., சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.
அ.தி.மு.க., தொழிற்சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு., ஆகியவை போராட்டத்தில் பங்கேற்றன.
இருப்பினும், மதுராந்தகம் பணிமனையில், நகர பேருந்துகள் 23, புறநகர் பேருந்துகள் 22 என, 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின.
வேலை நிறுத்த போராட்டத்தால், தொடர்ந்து பணி வழங்கப்பட்டு வருவதாகவும், அதனால் ஓய்வற்ற மன உளைச்சலில் பணியாற்றி வருவதாகவும், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் வேதனை தெரிவித்தனர்.
கல்பாக்கம்
கல்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு, தாம்பரம் போன்ற பகுதிகளுக்கு, பணிமனையின் 95 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டதாக, நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் இடையிலான நகரப் பேருந்துகளும் இயங்கின.

