sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெரும்பாக்கத்தில் ரூ.17.25 லட்சத்தில் அங்கன்வாடி மையம்

/

பெரும்பாக்கத்தில் ரூ.17.25 லட்சத்தில் அங்கன்வாடி மையம்

பெரும்பாக்கத்தில் ரூ.17.25 லட்சத்தில் அங்கன்வாடி மையம்

பெரும்பாக்கத்தில் ரூ.17.25 லட்சத்தில் அங்கன்வாடி மையம்


ADDED : மே 14, 2025 12:39 AM

Google News

ADDED : மே 14, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர்:செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அருகே உள்ள பெரும்பாக்கம் ஊராட்சியில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில், 14 குழந்தைகள் படிக்கின்றனர்.

மேலும் கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 25க்கும் மேற்பட்டோர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.

பழைய அங்கன்வாடி மைய கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், நாளடைவில் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக குழந்தைகளின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்நிலையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக, 2025-26 அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், 17.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது.

விரைவில் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு, புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்படும் என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us