sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திருப்போரூர் நகருக்குள் பகல் நேரங்களில் தடையை மீறி செல்லும் கனரக வாகனங்கள்

/

திருப்போரூர் நகருக்குள் பகல் நேரங்களில் தடையை மீறி செல்லும் கனரக வாகனங்கள்

திருப்போரூர் நகருக்குள் பகல் நேரங்களில் தடையை மீறி செல்லும் கனரக வாகனங்கள்

திருப்போரூர் நகருக்குள் பகல் நேரங்களில் தடையை மீறி செல்லும் கனரக வாகனங்கள்


ADDED : ஜூன் 05, 2025 02:07 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் நகர் பகுதியில் உள்ள ஓ.எம்.ஆர்., சாலை வழியாக தினமும், ஏராளமான கனரக வாகனங்கள், லாரிகள், தனியார் நிறுவன பேருந்துகள், வேன்கள் செல்கின்றன.

இதன் காரணமாக, இச்சாலையில் திருப்போரூர் ரவுண்டானா முதல் இள்ளலுார் இணைப்பு சாலை வரை, எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.

இதுபோன்ற போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, திருப்போரூர் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், புறவழிச்சாலை இருந்தும், ஏராளமான கனரக வாகனங்கள் நகருக்குள் பயணிக்கின்றன.

பொதுமக்கள் நலன் கருதியும், விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், திருப்போரூர் நகருக்குள் காலை, 6:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை கனரக வாகனங்கள், தனியார் நிறுவன பேருந்துகள், வேன்கள் செல்ல, திருப்போரூர் காவல் நிலையம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறும் கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என, ரவுண்டானா பகுதி மற்றும் இள்ளலுார் சாலை சந்திப்பில் ஓராண்டுக்கு முன் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.

இதனால் காலை, மாலை நேரங்களில் பிரதான இந்த ஓ.எம்.ஆர்., சாலையில், போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்து இருந்தது.

தற்போது மீண்டும், பழைய நிலையிலேயே காலை முதல் அனைத்து நேரங்களிலும், கனரக வாகனங்கள் உள்ளிட்ட பெரிய வாகனங்கள், திருப்போரூர் நகருக்குள் செல்கின்றன.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறிச் செல்லும் கனரக வாகனங்களால், மாணவ - மாணவியர் அச்சத்துடன் செல்கின்றனர்.

எனவே, தடை விதித்துள்ள நேரங்களில் கனரக வாகனங்கள், திருப்போரூர் நகருக்குள்வருவதை தவிர்க்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us
      Arattai