sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை புதிய பஸ் நிலையத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

/

செங்கை புதிய பஸ் நிலையத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

செங்கை புதிய பஸ் நிலையத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

செங்கை புதிய பஸ் நிலையத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு


ADDED : ஜன 26, 2024 12:04 AM

Google News

ADDED : ஜன 26, 2024 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், தாம்பரம், மதுராந்தகம், உத்திரமேரூர், திருப்போரூர், கல்பாக்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில், திருமணம், கோவில் திருவிழா, பண்டிகை நாட்களில், பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அதிகமாக வருகின்றனர்.

இவர்கள் பேருந்தில் ஏறும்போது, மொபைல் போன், பணம், நகைகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர்.

காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளுக்கு செல்வோர், பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்கின்றனர். அப்போது, அவர்களிடம் மொபைல் போன்களை மர்ம நபர்கள் பறித்துச்செல்கின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார் மீது, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இப்பகுதியில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபடாததால், தொடர்ந்து திருட்டு நடக்கிறது. இதை தடுக்க, புதிய பேருந்து நிலைய பகுதியில், 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us