/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மார்ச் 6ல் 'ஜிடோ பிரீமியர் கிரிக்கெட்'
/
மார்ச் 6ல் 'ஜிடோ பிரீமியர் கிரிக்கெட்'
ADDED : பிப் 25, 2024 01:26 AM
சென்னை:தேசிய அளவில் எட்டு மண்டல அணிகள் பங்கேற்கும், 'ஜிடோ பிரீமியர் கிரிக்கெட் லீக்' போட்டிகள், சென்னையில் மார்ச் 6ம் தேதி துவங்குகின்றன.
ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் நடத்தும் ஜிடோ பிரீமியர் கிரிக்கெட் லீக் - 2024 போட்டி, வரும் மார்ச் 6ம் தேதி துவங்கி, 9ம் தேதி வரை நடக்கிறது.
இப்போட்டிகள், ராயப்பேட்டையில் உள்ள அமீர் மஹால் மற்றும் மெரினா மைதானத்தில் நடக்கின்றன.
போட்டியில் கிழக்கு மண்டலம், குஜராத் மண்டலம், கே.கே.ஜி., மண்டலம், வடக்கு மண்டலம், மஹாராஷ்டிரா மண்டலம், டி.என்.ஏ.பி.டி.எஸ்., மண்டலம் மற்றும் ராஜஸ்தான் மண்டலம் உள்ளிட்ட தேசிய அளவில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
கடந்த 1983ல் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் மொஹிந்தர் அமர்நாத் ஆகியோர் முன்னிலையில், போட்டியின் துவக்க விழா நடக்க உள்ளதாக, ஜிடோ அமைப்பினர் நேற்று, சென்னையில் தெரிவித்தனர்.