sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குடிநீர் வசதி இல்லாததால் பஸ் நிலையத்தில் பயணியர் அவதி

/

குடிநீர் வசதி இல்லாததால் பஸ் நிலையத்தில் பயணியர் அவதி

குடிநீர் வசதி இல்லாததால் பஸ் நிலையத்தில் பயணியர் அவதி

குடிநீர் வசதி இல்லாததால் பஸ் நிலையத்தில் பயணியர் அவதி


ADDED : ஜன 17, 2024 07:21 AM

Google News

ADDED : ஜன 17, 2024 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம் : மதுராந்தகம் அண்ணா பேருந்து நிலையம், 30 ஆண்டுகள் கடந்து பழமையானதால், அவற்றை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே பகுதியில், புதிதாக 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது.

இதனால், மதுராந்தகம் வடக்கு பைபாஸ் அருகே, தற்காலிக பேருந்து நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து, மதுராந்தகம் டவுன் பகுதிக்கு 2 கிலோ மீட்டர் துாரம் செல்ல வேண்டும்.

இதனால், பஜார் வீதி, தேரடி வீதி, மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு நடந்து செல்வோர், தண்ணீர் குடிப்பதற்காக அமைக்கப்பட்ட தொட்டியில் குடிநீர் இல்லாததால், தாகத்தில் தவித்து வருகின்றனர்.

இதனால், கடைகளில், தண்ணீர் பாட்டில் விலை கொடுத்து வாங்கி அருந்தும் நிலை உள்ளது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போல், தற்காலிக பேருந்து நிலையத்திலும் அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us