/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி சுற்றுப்பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
/
கூடுவாஞ்சேரி சுற்றுப்பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
கூடுவாஞ்சேரி சுற்றுப்பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
கூடுவாஞ்சேரி சுற்றுப்பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
ADDED : மே 12, 2025 11:47 PM
கூடுவாஞ்சேரி, மின் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள அவசர கால பராமரிப்பு பணிகளால், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி சுற்றுப் பகுதியில், நாளை மறுநாள் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, மின் விநியோகம் தடை செய்யப்படும் என, மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மறைமலைநகர் கோட்டம், கூடுவாஞ்சேரி உபகோட்டத்தில் உள்ள, 33/11 கே.வி., துணை மின் நிலையத்தில், அட்வானி டவுன் மின்னுாட்டியில் நாளை மறுநாள், வியாழக்கிழமை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
இதனால் நந்திவரம் -- கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லுார், அண்ணா நகர், ஸ்ரீராம் சங்கரி குடியிருப்பு, சுவாதி நகர், சாய் எம்பையர், லட்சுமி நகர், அன்னை அரவிந்த் நகர் ஆகிய பகுதிகளில், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தவிர, மேட்டு தெரு, மல்லீஸ்வரர் கோவில் தெரு, பிராமண நகர், செங்கழணியம்மன் கோவில் தெரு, சின்ன குளக்கரை தெரு, பெரிய தெரு, ஜெய்பீம் நகர், கற்பகாம்பாள் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.