/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுார் ஊராட்சியில் இன்று மின் தடை
/
வண்டலுார் ஊராட்சியில் இன்று மின் தடை
ADDED : ஜூலை 04, 2025 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வண்டலுார்:வண்டலுார் ஊராட்சியில், இன்று மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெருங்களத்துார் ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள ஸ்ரீராம் துணைமின் நிலையத்தில், இன்று சனிக் கிழமை, மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், வண்டலுார் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்காரத் தோட்டம், வெங்கடேசபுரம், லட்சுமி நகர், செந்தில் நகர், ஓட்டேரி விரிவு 2வது தெரு முதல் 10வது தெரு வரை, காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.