/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சி.பெ.கோவில் ரயில்வே கேட் மூடல்
/
சி.பெ.கோவில் ரயில்வே கேட் மூடல்
ADDED : ஜன 27, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் - -ஸ்ரீபெரும்துார் சாலையில், சிங்கபெருமாள் கோவிலில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை, தினமும் 40,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இந்த ரயில்வே கேட் பகுதியில், முக்கிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று இரவு 10:00 மணி முதல், நாளை காலை 7:00 மணி வரை மூடப்பட்டு இருக்கும்.
எனவே, வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்ல வேண்டும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

