sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

துணை மின் நிலையத்தில் பழுது குரோம்பேட்டையில் மின் தடை

/

துணை மின் நிலையத்தில் பழுது குரோம்பேட்டையில் மின் தடை

துணை மின் நிலையத்தில் பழுது குரோம்பேட்டையில் மின் தடை

துணை மின் நிலையத்தில் பழுது குரோம்பேட்டையில் மின் தடை


ADDED : மே 29, 2025 12:11 AM

Google News

ADDED : மே 29, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குரோம்பேட்டை, குரோம்பேட்டை துர்கா நகர் துணை மின் நிலையத்தில் இருந்து, நியூ காலனி, மும்மூர்த்தி நகர், அம்பாள் நகர், ஏழுமலை நகர், இந்திர நகர், நியூ காலனி 15 மற்றும் 16வது குறுக்கு தெருக்களுக்கு, மின் சப்ளை வழங்கப்படுகிறது. இப்பகுதிகளில், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால், இப்பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

திடீரென அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டதால், அப்பகுதிவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். முதியோர், குழந்தைகள் துாக்கமின்றி அவதிப்பட்டனர்.

பகுதி முழுதும் இருள் சூழ்ந்து காணப்பட்டதால், குடும்பம் குடும்பமாக சாலையில் அமர்ந்திருந்தனர்.

உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு தொடர்புகொள்ள முயன்ற போதும், சரியான பதில் கிடைக்கவில்லை.

பின், இரண்டரை மணி நேரம் கழித்து, இரவு 9:40 மணிக்கு மின் சப்ளை மீண்டும் வழங்கப்பட்டது. அதன்பின், மக்கள் வீடுகளுக்கு சென்றனர்.

இதுகுறித்து, மக்கள் விழிப்புணர்வு மையத்தை சேர்ந்த வி.சந்தானம், 86, கூறியதாவது:

பருவ மழை துவங்குவதற்கு முன், அனைத்து துணை மின் நிலையங்களையும் முறையாக பராமரித்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், தாம்பரம், பல்லாவரம் மின் கோட்டங்களில் உள்ள ஒரு துணை மின் நிலையத்தை கூட பராமரிக்கவில்லை. ஆட்கள் பற்றாக்குறையால் பராமரிக்க முடியவில்லை என, மின் வாரிய அதிகாரிகளே ஒப்புக்கொள்கின்றனர்.

அதனால், பருவ மழையின் போது, இன்னும் எவ்வளவு பிரச்னை வருமோ என்பது தெரியவில்லை. இவ்விஷயத்தில், உயர் அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us