sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அபாய நிலையில் குடிநீர் தொட்டி இடித்து அகற்ற கோரிக்கை

/

அபாய நிலையில் குடிநீர் தொட்டி இடித்து அகற்ற கோரிக்கை

அபாய நிலையில் குடிநீர் தொட்டி இடித்து அகற்ற கோரிக்கை

அபாய நிலையில் குடிநீர் தொட்டி இடித்து அகற்ற கோரிக்கை


ADDED : ஜூன் 21, 2025 09:27 PM

Google News

ADDED : ஜூன் 21, 2025 09:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்,:பூதுாரில் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுராந்தகம் ஒன்றியம், பூதுார் ஊராட்சிக்கு உட்பட்ட ஈசூர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் குழாய் வாயிலாக மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்த நிலையில், துாண்களில் உள்ள சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், தொட்டியின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே பகுதியில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us