/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அங்கன்வாடி மையம் அமைக்க கடுக்கலுாரில் வேண்டுகோள்
/
அங்கன்வாடி மையம் அமைக்க கடுக்கலுாரில் வேண்டுகோள்
ADDED : பிப் 24, 2024 01:25 AM

சூணாம்பேடு:சூணாம்பேடு அருகே கடுக்கலுார் கிராமத்தில், மேல்நிலை தேக்கத்தொட்டி அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது.
இந்த அங்கன்வாடி மையத்தில், 20 குழந்தைகள் படிக்கின்றனர். மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 30 பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.
பழைய அங்கன்வாடி மைய கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால் நாளடைவில் பழுதடைந்தது. முன்னெச்சரிக்கையாக, மூன்று ஆண்டுகளுக்கு முன் இ - சேவை மையத்திற்கு அங்கன்வாடி மையம் மாற்றப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.
குடிநீர், கழிப்பறை வசதி மற்றும் போதிய இடவசதி இன்றி குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய அங்கன்வாடி மைய கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.