sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் இயக்க எதிர்பார்ப்பு

/

நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் இயக்க எதிர்பார்ப்பு

நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் இயக்க எதிர்பார்ப்பு

நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் இயக்க எதிர்பார்ப்பு


ADDED : பிப் 06, 2024 04:53 AM

Google News

ADDED : பிப் 06, 2024 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர், : அடையாறு - கேளம்பாக்கத்திற்கு தடம் எண்: 19பி மற்றும் அடையாறு - வெளிச்சை தடம் எண்: 19கே என்ற அரசு பேருந்துகள், புதுப்பாக்கம் வழியாக ஓ.எம்.ஆர்., சாலை, தாழம்பூர் சிறுசேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக இப்பேருந்து சேவை அறிவிப்பு ஏதுமின்றி, திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்தோர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் என, அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசனிடம், புதுப்பாக்கம் ஊராட்சி தலைவர் ஆறுமுகம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

எனவே, நிறுத்தம் செய்யப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us
      Arattai