/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
/
திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED : ஜன 28, 2024 04:19 AM

திருவள்ளூர்: திருமழிசையில் அமைந்துள்ள ஜெகந்நாத பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் கோவிலில், திரு அவதார மகோற்சவ திருவிழா, கடந்த 19-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து 10 நாட்கள் நடந்த விழாவில், உற்சவர் ஜெகந்நாத பெருமாள் காலை, மாலை என இரு வேளைகளில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று நடந்தது. காலை 7:00 மணிக்கு, தேரில் திருமழிசை ஆழ்வார் எழுந்தருளினார்.
காலை 9:00 மணிக்கு, பக்தர்கள் 'கோவிந்தா... கோவிந்தா...' என கோஷமிட்டபடி, வடம் பிடித்து தேர் இழுத்தனர். பெண்கள், பாடல் பாடி, கோலாட்டம் ஆடிச் சென்றனர்.
நான்கு வீதிகள் வழியாக வலம் வந்த தேர், மதியம் 12:30 மணிக்கு, கோவிலை வந்தடைந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை, வெள்ளவேடு போலீசார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.
திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட மாடவீதிகளில், பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் திறந்த வெளியில் இருந்தன. இது, தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்களிடையே முகம் சுளிக்க வைத்தது.
மேலும், மாடவீதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் தேரோட்டத்திற்கு இடையூறாக சாய்ந்த நிலையில் இருந்தன. இதனால், பக்தர்கள் கடும் அச்சத்துடனே தேர் இழுத்து வந்தனர்.
வருங்காலங்களில், மின் கம்பங்களை மாற்றியமைக்கவும், திறந்த வெளியில் உள்ள கால்வாய்களை சீரமைக்க வேண்டுமெனவும், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.