/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவளம் - மாமல்லை தடத்தில் மூன்று நாட்கள் போக்குவரத்து தடை
/
கோவளம் - மாமல்லை தடத்தில் மூன்று நாட்கள் போக்குவரத்து தடை
கோவளம் - மாமல்லை தடத்தில் மூன்று நாட்கள் போக்குவரத்து தடை
கோவளம் - மாமல்லை தடத்தில் மூன்று நாட்கள் போக்குவரத்து தடை
ADDED : ஜன 26, 2024 12:22 AM
மாமல்லபுரம்:'கேலோ இந்தியா' சைக்கிளிங் போட்டிக்காக, கோவளம் - மாமல்லபுரம் தடத்தில், இன்று முதல் நாளை மறுநாள் வரை, பகலில் ஆறு மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து, மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி., ஜெகதீஸ்வரன் கூறியதாவது:
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு சைக்கிளிங் போட்டி, நாளை மற்றும் நாளை மறுநாள், கோவளம் - மாமல்லபுரம் இடையே, கிழக்கு கடற்கரை சாலையில் நடக்கிறது. இன்று அதற்கான ஒத்திகை நடக்கிறது.
எனவே, கோவளம் - மாமல்லபுரம் தடத்தில் மட்டும், மூன்று நாட்களும், காலை 6 மணி முதல், பகல் 12 மணி வரை, வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
மாமல்லபுரம் - சென்னை தடத்தில் மட்டும், வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம். சென்னையிலிருந்து வரும் வாகனங்கள், கோவளத்திலிருந்து கேளம்பாக்கம் வழியாக பழைய மாமல்லபுரம் சாலை வழியே செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

