/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ ரயிலில் கஞ்சா புகைத்த ரவுடி கைது
/
மெட்ரோ ரயிலில் கஞ்சா புகைத்த ரவுடி கைது
ADDED : ஜூலை 28, 2024 12:59 AM

சென்னை, தண்டையார்பேட்டையிலிருந்து மெட்ரோ ரயிலில் தேனாம்பேட்டை செல்லும் போது புவனேஷ், 24, என்பவர், கஞ்சா பயன்படுத்தி உள்ளார். இதை சக பயணி ஒருவர், அவரது மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார்.
இது குறித்து அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரும் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். சென்னையில் கஞ்சா புழக்கம் அதிகரித்து, சட்டம் - ஒழுங்கு நிலை சீர்கெட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த தேனாம்பேட்டை போலீசார், மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய புவனேஷ், என்பவரை நேற்று கைது செய்தனர். கைதான புவனேஷ் மீது காசிமேடு காவல் நிலையத்தில், கொலை மிரட்டல், திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், அவரது கூட்டாளி நரேந்திரன், 26, என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.