sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மறுமணத்திற்கு பதிவு செய்த பெண்களிடம் நுாதன முறையில் நகை திருடியவர் கைது

/

மறுமணத்திற்கு பதிவு செய்த பெண்களிடம் நுாதன முறையில் நகை திருடியவர் கைது

மறுமணத்திற்கு பதிவு செய்த பெண்களிடம் நுாதன முறையில் நகை திருடியவர் கைது

மறுமணத்திற்கு பதிவு செய்த பெண்களிடம் நுாதன முறையில் நகை திருடியவர் கைது


ADDED : ஜூன் 04, 2024 12:20 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் காயத்ரி, 45. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், மறுமணம் செய்ய திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவை பார்த்து, கோயம்புத்துாரைச் சேர்ந்த யுவராஜ், 50, என்பவர் காயத்ரியை அணுகி, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, திருமணத்திற்கு முன் கண் திருஷ்டி கழிக்க வேண்டும் என்றும், அதற்கு மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்கு நகையுடன் வர வேண்டும் என்றும், யுவராஜ் கூறியுள்ளார்.

இதை நம்பிய காயத்ரி, 5 சவரன் நகையுடன், மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளார்.

அங்கு இருவரும் சுவாமி தரிசனம் செய்த பின், நகைகளை ஒரு சிறிய பானையில் வைத்து மூடி கொடுத்துள்ளார். அதை வீட்டின் பூஜை அறையில் மூன்று நாட்கள் வைத்து வழிபாடு செய்த பின், திறந்து நகைகளை எடுத்துக் கொள்ளுமாறு யுவராஜ் கூறியுள்ளார்.

இதை உண்மையென நம்பி, அந்த பானையை வீட்டின் பூஜை அறையில் வைத்து காயத்ரி வழிபட்டார்.

மறுநாள் யுவராஜ் மொபைல்போன் அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த காயத்ரி, பானையை திறந்து பார்த்த போது, அதில் நகை இல்லாமல், கண்ணாடி வளையல்கள் இருந்துள்ளன.

அதிர்ச்சியடைந்த அவர், மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர்.

இதில், மறுமணம் செய்ய திருமண தகவல் மையத்தில் பதிவு செய்த சில பெண்களை, இதேபோல் யுவராஜ் ஏற்கனவே ஏமாற்றி நகை பறித்தது தெரிந்தது. யுவராஜை, மாங்காடு போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us