sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சீரானது குடிநீர் வினியோகம் நெமிலிச்சேரி வாசிகள் மகிழ்ச்சி

/

சீரானது குடிநீர் வினியோகம் நெமிலிச்சேரி வாசிகள் மகிழ்ச்சி

சீரானது குடிநீர் வினியோகம் நெமிலிச்சேரி வாசிகள் மகிழ்ச்சி

சீரானது குடிநீர் வினியோகம் நெமிலிச்சேரி வாசிகள் மகிழ்ச்சி


ADDED : ஜூலை 25, 2024 12:32 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெமிலிச்சேரி பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நெமிலிச்சேரி. இங்கு, நாகாத்தம்மன் நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இப்பகுதி குடிநீர் பிரச்னையை சமாளிக்க, ஊராட்சி நிர்வாகம் சார்பில், 2018 -- 19ல், மாநில நிதி நிறுவனம் சார்பில், 10 லட்சம் ரூபாய் செலவில், ஆழ்துளை கிணறு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

அதில் இருந்து பெறப்பட்ட குடிநீர், 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தொட்டியில் ஏற்றி, கடந்த 2022 முதல் வினியோகிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளாக இலவசமாக வழங்க வேண்டிய குடிநீர், ஒரு குடம் 5 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வசூலிக்கப்படும் பணத்தை, ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பங்கிட்டு கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி, குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் பழுதாகி, குடிநீர் வினியோகம் திடீரென நிறுத்தப்பட்டது.

வழக்கம் போல் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டினர். இதனால், பொதுமக்கள் தனியார் லாரியில் வரும் குடிநீரை ஒரு குடம் 10 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தி வந்தனர்.

இது குறித்து நம் நாளிதழில் கடந்த 1ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, சுத்திகரிப்பு இயந்திரம் பழுது சரி செய்து, கடந்த மூன்று தினங்களாக பகுதி வாசிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us