sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மது போதையில் கணவர் தகராறு குத்திக்கொன்ற பெண் கைது

/

மது போதையில் கணவர் தகராறு குத்திக்கொன்ற பெண் கைது

மது போதையில் கணவர் தகராறு குத்திக்கொன்ற பெண் கைது

மது போதையில் கணவர் தகராறு குத்திக்கொன்ற பெண் கைது


ADDED : ஜூன் 04, 2024 12:17 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி,

சென்னை அருகே பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, யமுனா நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன், 35. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மங்கள லட்சுமி, 30.

பூந்தமல்லி காவல் நிலையத்தில், ஊர் காவல் படையில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், சீனிவாசன் மது போதைக்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வந்து மனைவி மங்கள லட்சுமியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் சீனிவாசன் மீண்டும் தகராறு செய்து உள்ளார். இதனால், கோபமடைந்த மங்கள லட்சுமி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சீனிவாசன் வயிற்றில் குத்தினார்.

பலத்த காயமடைந்த சீனிவாசனை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சீனிவாசன் இறந்தார்.

நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, மங்கள லட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us
      Arattai