/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மத்திய பட்ஜெட்டில் ஐ.சி.எப்.,க்கு ரூ.13,872 கோடிக்கு ஒதுக்கீடு
/
மத்திய பட்ஜெட்டில் ஐ.சி.எப்.,க்கு ரூ.13,872 கோடிக்கு ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட்டில் ஐ.சி.எப்.,க்கு ரூ.13,872 கோடிக்கு ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட்டில் ஐ.சி.எப்.,க்கு ரூ.13,872 கோடிக்கு ஒதுக்கீடு
ADDED : பிப் 06, 2024 12:37 AM
சென்னை சென்னை ஐ.சி.எப்., தொழிற்சாலையில், ரயில் பெட்டிகள் தயாரிப்பு மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள மத்திய பட்ஜெட்டில் 13,872 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2024-25ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் , இந்திய ரயில்வே துறைக்கு மொத்தம் 2.52 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வேத்துறைக்கு இதுவே, அதிகபட்ச நிதியாகும். இந்நிலையில், இந்த நிதி மொத்தமுள்ள 17 மண்டலங்கள், 3 ரயில்வே தொழிற்சாலைகள் வாரியாக பிரித்து ஒதுக்கி அளிக்கப்பட்டுள்ளது. இதில், ரயில் பெட்டிகள் தயாரிப்பில் முக்கியமானதாக இருக்கும் சென்னை ஐ.சி.எப்., தொழிற்சாலைக்கு, இந்த பட்ஜெட்டில் 13,872 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்வே பெட்டிகள் தயாரிப்பதில், முக்கிய தொழிற்சாலையில், காலத்துக்கு ஏற்ப நவீன ரயில் பெட்டிகள், சுற்றுலா, ராணுவத்துக்கான ரயில், மெட்ரோ ரயில் பெட்டி உள்ளிட்ட 75 வகைகளில், நுாற்றுக்கணக்கான வடிவமைப்புகளில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. சமீப காலமாக இங்கு தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் விரைவு ரயில்கள், பயணியர் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அடுத்தகட்டமாக, தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் படுக்கை வசதி, வந்தே மெட்ரோ ரயில்கள் இந்த ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்.
இந்த பஜெட்டில், சென்னை ஐ.சி.எப்.,க்கு 13,872 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்கள், அம்ரித் பாரத் ரயில்கள், வழக்கமான எல்.எச்.பி., பெட்டிகள், மின்சார ரயில் பெட்டிகள் உள்ளிட்ட பெட்டிகளை தயாரிக்க 13,650 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட உள்ளது. இதுதவிர, மற்ற நிதியை ஐ.சி.எப்., வளாகம், குடியிருப்பு வளாகம் போன்றவை மேம்படுத்த பயன்படுத்தப்படும். கடந்த ஆண்டில் ஐ.சி.எப்., தொழிற்சாலையில் பல்வேறு புதிய கட்டமைப்பு பணிகள் மேற்கொண்டதால், 15,428 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறினர்.