ADDED : ஜன 26, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, குட்கா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 26 பேரை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து உள்ளனர்.
சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரை, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த ஒரு வாரத்தில், குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் உட்பட 26 பேரை, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இம்மாதம், 60 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

