sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருடிய நகையை அடகு வைத்து சொகுசாக வாழ்ந்த 4 பேர் கைது

/

திருடிய நகையை அடகு வைத்து சொகுசாக வாழ்ந்த 4 பேர் கைது

திருடிய நகையை அடகு வைத்து சொகுசாக வாழ்ந்த 4 பேர் கைது

திருடிய நகையை அடகு வைத்து சொகுசாக வாழ்ந்த 4 பேர் கைது


ADDED : செப் 16, 2025 01:27 AM

Google News

ADDED : செப் 16, 2025 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவேற்காடு;வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி, அதை அடகு வைத்து சொகுசாக வாழ்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

திர ு வேற்காடு, பெருமாள் அகரத்தை சேர்ந்தவர் வித்யா, 45; போரூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 12ம் தேதி, அவர் வேலைக்கு சென்றார்.

மதியம், அவரது மகன் அரவிந்த் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த, 22 சவரன் தங்க நகை திருடு போனது தெரிந்தது.

இதுகுறித்து, திருவேற்காடு போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' காட்சி வாயிலாக மர்ம நபர்களை தேடி வந்தனர்.இதில், திருவேற்காடைச் சேர்ந்த விஜய், 26, பரத், 22 ஆகிய இருவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். வித்யா வீட்டில் திருடிய நகையில், 7 சவரனை நண்பர்கள் உதவியுடன் அடகு வைத்து, அந்த பணத்தில் உல்லாசமாக ஊர் சுற்றித் திரிந்தது தெரிந்தது.

நகையை அடகு வைக்க உதவிய, திருவேற்காடைச் சேர்ந்த அவரது நண்பர்கள் நிர்மல் குமார், 23, சிதம்பரத்தை சேர்ந்த காளிதாஸ், 36 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, 22 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். விஜய், பரத் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us