/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிட்டி/ கோயம்பேட்டில் மட்டும் தற்காலிகமாக ஆம்னி பஸ்கள் அனுமதிக்க ஆலோசனை
/
சிட்டி/ கோயம்பேட்டில் மட்டும் தற்காலிகமாக ஆம்னி பஸ்கள் அனுமதிக்க ஆலோசனை
சிட்டி/ கோயம்பேட்டில் மட்டும் தற்காலிகமாக ஆம்னி பஸ்கள் அனுமதிக்க ஆலோசனை
சிட்டி/ கோயம்பேட்டில் மட்டும் தற்காலிகமாக ஆம்னி பஸ்கள் அனுமதிக்க ஆலோசனை
ADDED : பிப் 06, 2024 12:39 AM
சென்னை,பயணியரை அழைத்து செல்ல கோயம்பேட்டில் மட்டும் ஆம்னி பஸ்களுக்கு தற்காலிகமாக அனுமதிக்க போக்குவரத்து துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், துாத்துக்குடி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுவே, தீபாவளி, பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில்1,500க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆம்னி பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். சென்னை கோயம்பேடு, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பயணியை ஏற்றி செல்லவும், இறக்கிவிடவும் கடந்த 24ம் தேதி முதல் முதல் தடை உத்தரவு அமலானது.
அதன்பிறகு, சென்னை நகருக்குள் பயணிகளுடன் ஆம்னி பஸ்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், நகருக்குள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையும் தொடர்ந்தது. வெளியூரில் இருந்து வரும் பயணியருடன் சென்னையின் பல்வேறு இடங்களுக்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தை நாடினர். இந்த விவகாரத்தில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தியது.. இதன் தொடர்ச்சியாக சென்னை, எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் கடந்த 3ம் தேதி பேச்சு நடைபெற்றது. சி.எம்.டி.ஏ., மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிலையில், கிளாம்பாக்கம் அருகில் ஆம்னி பஸ் நிறுத்ததிற்கான பணிகள் முழுதும் முடியும் வகையில், ஆம்னி பஸ்களை கோயம்பேட்டில் மட்டுமே அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் புறநகர் வாயிலாக கிளாம்பாக்கம் செல்ல வேண்டும். இதற்கான, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது:
கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில், ஆம்னி பஸ்களுக்கான போதிய அளவில் வசதிகள் வரும் வரையில், கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு, சென்னை மாநகரின் ஜி.எஸ்.டி., சாலை வழியாக சென்று, கிளாம்பாக்கம் செல்ல அனுமதிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அப்போது, தான் ஆம்னி பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணியர், சிரமம் இன்றி பயணம் செய்ய முடியும். அவர்களிடம் இருப்பிடங்களில் இருந்து தடையின்றி, செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
கிளாம்பாக்கத்திற்கு மாநகர பஸ்கள் செல்வதால்
பல வழித்தடங்களில் பஸ் சேவை குறைப்பு - பயணியர் புகார்
05.2.2024/சென்னை/கி.ஜெயப்பிரகாஷ்/1840/5:00
சென்னை, பிப். 6-
கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்திற்கு, அதிகமாக மாநகர பஸ்கள் இயக்குவதால், வழக்கமாக செல்லும் பல்வேறு வழித்தடங்களில் பஸ்களின் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகரில் தினமும் 3,200க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகரின் எல்லை விரிவடைந்து வருவதால், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, கோவளம், மகாபலிபுரம், எண்ணூர், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதற்கிடையே, கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து, மாநகரின் பல்வேறு இடங்களை இணைக்கும் வகையில், மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், மாநகரின் பல்வேறு வழித்தடங்களில் பஸ் சர்வீஸ் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வடபழநி, அண்ணாநகர், அம்பத்துார், ஆவடி, அடையார், திருவான்மியூர், சைதை, தி.நகர், பிராட்வே பகுதிகளில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் பஸ்களின் சர்வீஸ் குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: சென்னை புறநகரில் அனைத்து இடங்களுக்கும் செல்ல ஒரே பொது போக்குவரத்து வசதி மாநகர பஸ்கள் தான். ஆனால், இந்த பஸ்கள் இயக்கத்தில் சீரான இல்லை. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பிற்கு பிறகு, பிராட்வே, தி.நகர், வடபழநி, திருவொற்றியூர் போன்ற முக்கிய வழித்தடங்களில் செல்லும் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மாநகர பஸ்களுக்காக, பயணியர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பயணியருக்கு சீரான பஸ் வசதி கிடைக்க நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, ''கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தை இணைக்கும் வகையில், மாநகர பஸ்களின் சேவையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், பஸ் வசதி இல்லாமல், பயணியர் பாதிக்கப்படவில்லை. பயணியர் புகார் குறித்து, பணிமனை அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்படும். இருப்பினும், அடுத்த சில மாதங்களில் 500க்கும் மேற்பட்ட புதிய பஸ்கள் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வரும். இதன்வாயிலாக, சீரான பஸ் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்''என்றனர்.